Sunday, May 07, 2006

நிழலாக...

எப்பொழுதாவது உங்கள் நிழலை கவனித்திருக்கிறீர்களா... எனக்கு நிழல் ஒரு மிகப்பெரிய அதிசயம். ஒவ்வொரு நிலமும் என் நிழலை வெவ்வேறு விதமாக பிரதிபலிக்கின்றன. பகலில் கருமையாக என்னுடனே நடந்து வரும் நிழல், இரவானதும் பல வண்ணங்களுடன் என்னை கனவாக சூழ்ந்து கொள்கிறது. என்றாவது கனவில் நிழலை பார்த்திருக்கிறீர்களா?. நான் எங்கெங்கெல்லாம் செல்கின்றேன் என்று என்னை ஒரு கருமையான திரவமாக மாற்றி நிலமெங்கும் ஊற்றிக் கொண்டே போகிறது எனது நிழல். பல ஊர்களில், பல இடங்களில் என் நிழலை நான் பார்த்திருந்தாலும், நான் மிகவும் ரசிக்கின்ற நிழல், இனியும் என் சொந்த ஊரில் இருக்கின்றது. இப்பொழுதும் அது அங்கேயே இருக்கின்றது. நான் பார்த்து ரசித்த மரங்களில், சிறிய ஓடைகளில், நான் சிறுவனாக நடந்து திரிந்த பாதைகளில் .... ஊட்டியை விட்டு இனியும் எனது நிழல் வரவேயில்லை. இன்றும் இரவில் கண் மூடினால், நான் என்னை விட்டு, கனவில் இருக்கும் என் நிழலுடன் இணைகிறேன். அங்கே இப்பொழுதும் காடுகளில் சுற்றி அலைகின்றேன் பல வண்ணங்களுடன் என் நிழலும் , கருமையாக நானும்.....

1 Comments:

Blogger Deepa said...

நிழலுக்குள் இத்தனை வண்ணங்களா...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க

Jul 19, 2007, 3:39:00 AM  

Post a Comment

<< Home