காலம்
சிறு வயது அபத்தங்களை நினைத்துசிரித்துக் கொள்வேன் அவ்வப்பொழுது...
இன்னொரு நாளில் சிரிப்பேன்..
இதை நினைத்தும்.....
காலம் என்ற சொல்லை யார் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இனியும் அந்த சொல்லின் பிரம்மாண்டம் எனக்கு புரிபடவில்லை. பல விநாடிகளின் தொகுப்புதான் காலமா? விநாடி என்பது பூமியின் சுழற்சியிலிருந்து கணக்கிடப்படுகிறதா? அப்படியென்றால் நாம் பூமியிலிருந்து வெளியேறினால், எதை அடிப்படையாக கொண்டு காலத்தை கணக்கிடுவது ?
ஒரு ஓவியம் நம்மை அந்த ஓவியம் வரைந்த கணத்திற்கு கொண்டு செல்கிறது. கதை, கவிதை எல்லாம் அதையே செய்கின்றன. உண்மையில் கலை என்பது காலத்தை சேகரிக்கும் ஒரு வித்தையெனப் படுகிறது
காலமானார் என்ற வார்த்தையை படிக்கும்போதெல்லாம் என்னுடைய ஆச்சரியம் அதிகரிக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையை... அவன் கனவுகளை ... அவனுடைய நினைவுகளை எப்படி பூமியின் சுழற்சியோடு தொடர்பு படுத்துவதென்று. காலம் அசைவில்லாமல் நின்றுக் கொண்டிருக்கிறது. நாம் தான் அதை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்

0 Comments:
Post a Comment
<< Home